அன்பார்ந்த வள்ளியூர் வாழ் பெருங்குடி மக்களே !
வள்ளியூர் முகநூல் குழுமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
குழுவின் நோக்கம்:
• அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு பாலமாக செயல்படுவது.
• ஊர் முன்னேற நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வது
• வள்ளியூர் மக்கள் எங்கிருந்தாலும் சொந்த மண்ணில் நடப்பவை பற்றி அறிந்து கொள்ள வகைசெய்வது.
உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பது..
1. ஊர் முன்னேற கருத்துக்களோ செயல் திட்டமோ இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள்.
2. வள்ளியூர் மக்கள் பயன்பெறும் வகையிலான தகவல்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள்.
3. ஊரில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தகவலாக பதியுங்கள்.
4. ஊரில் நடக்கும் செயல் திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
5. உங்களின் தனித்திறமைகள் ஏதேனும் இருந்தால் அதனை நம் மக்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள்.
6. உங்கள் கருத்துக்களை அடுத்தவர் மனதை புண்படுத்தாதவாறு நாகரீகமாக பதிவு செய்யுங்கள்.
7. உறுப்பினர்கள் தங்கள் சொந்த புகைப்படத்துடன் உள்ள கணக்கிலிருந்து தொடர்புகொள்ளுங்கள். ஏதேனும் சொந்த காரணத்தினால் புகைப்படம் போடவிருப்பமில்லை எனில் நிர்வாகிகளை தனியே புகைப்படத்துடன் காரணம் கூறி உறுப்பினராக வேண்டுகோள் விடுங்கள். தங்கள் பெயருக்கு பின்னால் முடிந்தவரை சாதி பெயர்களை தவிருங்கள்..
8. ஏதேனும் நிகழ்ச்சி பற்றிய தகவல் அனைத்து உறுபினர்களுக்கும் தெரிவிக்க நிர்வாகக்குழுவை தொடர்புகொள்ளுங்கள்.
உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டியது.
1. அடுத்தவர் மனதை புண்படுத்தும் தகவல்கள் வேண்டாம். உண்மையான சம்பவமாகவே இருந்தாலும் நேரிடையாக ஒரு தனிமனிதனையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ குறிப்பிட்டு குறை கூற வேண்டாம்.
2. சாதி, அரசியல், மதம் போன்றவை பற்றி கருத்து விவாதங்கள் வேண்டாம்.
3. குழுவின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடக்கும் உறுப்பினர் அறிவுப்பு இன்றி நீக்கபடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குறிப்பு:
• உங்கள் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஏற்க்கப்படலாம். அவசரமில்லாத பதிவுகளுக்கு ஒரு நாள் வரை அவகாசம் கொடுங்கள். அவசரமான பதிவு எனில் நிர்வாகிகளை தனியே தொடர்பு கொள்ளுங்கள்.
• விளம்பரங்கள், பண்டிகை கால வாழ்த்துக்கள் ,பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்றவைகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன..
நன்றி
வள்ளியூர்
திருநெல்வேலி மாவட்டம்
https://www.facebook.com/valliyur
https://www.facebook.com/groups/vallioor