திருவரங்கம் திருக்கண்டியூர் என்ற திவ்யதேசங்களுக்கு மத்தியிலும்,திருவன்பில்,திருப்பேர்நகர் போன்ற திவ்யதேசங்களின் நேர்வரிசையிலும், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயராலும், இராஜமன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ஜீயராலும் மற்றும் ஸ்ரீசுந்தரவரதாச்சாரி பெரியநம்பிகள், ஸ்ரீபத்ரி நாராயண பராசரபட்டர் ஸ்வாமிகளாளும் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் காவிரியின் தெற்கேயும்,வெண்ணாற்றின் வடக்கேயும் அமையப்பெற்ற நஞ்சையும்,புஞ்சையும் விஞ்சி நிற்கும் வாலைவனம்(இளங்காடு)எனும் கிராமத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் கோபாலனையும் மற்றும் ஞானமூர்த்தியான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரையும் இவ்பக்கத்தின் மூலம் அனைவருக்கும் பகிரவே இப்பக்கம்.