சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் #நியூஸ்7தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் தவிர்த்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்ய முன் வரும் தன்னார்வலர்கள், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர்களிடம் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதிலுமிருந்து வழங்கப்படும் நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு களப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
சென்னையில் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் நேரடியாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
மேலும் தொடர்புக்கு : 7708 44 7077,
வாட்ஸ் அப்: 7708 11 0136
இ-மெயில் : anbupalam@ns7.tv