எழில் மிகு அல்வாய் ஊரில் அமர்ந்து உலக நாயகியாக உலக மக்கள் அனைவரிற்கும் அருளினை வாரி வழங்கும் எம் அம்பிகையான அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள், ஏனைய நிகழ்வுகளை நேரடியாக ஆலயத்திற்கு வந்து தரிசனம் காண முடியாதவர்களிற்கும் மற்றும் வெளிநாடு வாழ் புலம்பெயர் அடியவர்களுக்கும் உதவும் பொருட்டு நிழற்படங்களாக எடுத்து அதனை எமது வலைப்பூவில் பிரசுரிக்கின்றோம்.