உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்= யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனான் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்= மற்றையார் எல்லாம் பிறரைத் தொழுது அதனான் தாமும் உண்டு அவரைப் பின்பற்றிச் செல்கி்ன்றவர்.