எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிருபையாய் எங்களை இரட்சித்தீரே உமக்கு நன்றி. எங்களோடு வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கூட உம்மிடத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, அவர்களும் எப்படியாவது உம்முடைய அன்பை கண்டு கொள்ள கிருபை தருவீராக. அவர்களை நாங்கள் நேசிக்கிறோமே, அவர்கள் இரட்சிக்கப்படவில்லை என்றால் நரக ஆக்கினைக்கு உட்படுவார்களே, தயவாய் அவர்களையும் இரட்சிப்பீராக. அவர்களும் உம்முடைய மந்தையில் சேர்க்கப்படுவார்களாக. உமக்காய் பேசிட, உமக்காய் வாழ்ந்திட உம்மில் அன்புகூருகிறவர்களாக எங்களை படைக்கிறோம், ஏற்று எங்களை வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.