துள்ளி திரிந்தக் காலம்
பள்ளிப் பருவம்
மீண்டும் வரா பருவம்..
நினைத்து ஏங்கும் உள்ளம்
தவியாய் தவிக்கும் நெஞ்சம்
சோறு இல்லை, உடுக்க நல்ல
உடுப்பு இல்லை...அந்நாளில்..
சந்தோஷத்துக்கு மட்டும்
குறையும் இல்லை....
கள்ளம் இல்லா உள்ளம்..
கபடம் இல்லா பேச்சு...
சிரிப்பை தவிர துயரம்
அறியா பருவம்...
நட்புக்காய் சண்டை போட்ட
காலம் நினைவில்....
"என் தோழி எனக்கு மட்டுமே"..
மாறவில்லை எண்ணம்
வளர்ந்த பிறகும்....
சுயநலம் இல்லா நட்பு
சுதந்திரமாய் பழக
தடையில்லா பருவம்......
பள்ளிக் குறும்புகள்
தலைமுறையாய் தொடரும்
புதிர் இன்று வரை விளங்கவில்லை.....
போட்டியாய் படித்த பாடங்கள்
இன்று வரை நினைவில்...
எதிரியாய் நினைத்த நட்பு
இன்று வரை எதிரி தான்
மாற்ற முடியவில்லை.....
இன்று எல்லாம் இருந்தும்
உண்மையான நட்பும் இல்லை..
சந்தோஷமும் இல்லை
ஏங்குபவர் பலர்.....
வேண்டும் பள்ளிப் பருவம்..
மீண்டும் பிறக்க வரம் வேண்டாம்...
இறக்கும் வரை படிக்கும் வரம் வேண்டும்
என் பள்ளியில்...